அதிர்ச்சி வீடியோ... நடனம் ஆடிய போது இளைஞர் மாரடைப்பால் பலி!! விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்!!
கொரோனாவுக்கு பிறகு சமீபகாலமாக திடீர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அதிலும் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே மரணம், உடற்பயிற்சி செய்யும் போது சுருண்டு விழுந்து பலி, பள்ளி மாணவன் மாரடைப்பால் மரணம், மணமேடையில் மணமகன் மரணம், கல்லூரி மாணவர் விளையாடும் போது மரணம் என மாரடைப்புகள் தொடர்ந்து வருவதால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
గణేష్ మండపం దగ్గర డాన్స్ చేస్తూ గుండెపోటుతో మృతి
— Telugu Scribe (@TeluguScribe) September 21, 2023
శ్రీ సత్యసాయి జిల్లా - ధర్మవరంలో
ప్రసాద్ (26) అనే యువకుడు బుధవారం రాత్రి గణేష్ మండపం వద్ద డాన్స్ చేస్తూ గుండెపోటుతో ఒక్కసారిగా కుప్పకూలి మృతి చెందాడు. pic.twitter.com/RUqf1mzRMR
அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் நடனம் ஆடிய போது பிரசாத் என்ற 27 வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் தர்மவரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விநாயகர் சிலை வைத்து 3 நாட்கள் கோலாகலமாக சிறப்பு பூஜைகள் கொண்டாட்டங்கள் களைகட்டின.
அதே போல் நேற்று இரவும் விநாயகர் மண்டபம் முன்பு சினிமா பாடல்களுக்கு இளைஞர்கள் பிரசாத்துடன் அவரது நண்பர்கள் சேர்ந்து நடனமாடிக்கொண்டிருந்தனர். அப்போது பிரசாத் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். அதிர்ச்சி அவரது நண்பர்கள் உடனே தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொண்டாட்டத்தில் மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...