தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது தாயாரிடம் ஒப்படையுங்க... சீமான் ஆவேசம்!

 
சீமான்

தனது சொந்த நாட்டிற்கு திரும்ப ஆசைப்பட்ட நிலையில், நாடு திரும்பாமலேயே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில், “உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ள சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படையுங்கள்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட சாந்தன், திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

சாந்தன்

கல்லீரல் செயலிழப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை சாந்தன் உயிரிழந்தார். சாந்தனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  அவரது உயிரற்ற உடலையாவது  தாயிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உருக்கமாக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக  சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.

பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்தது, ஆனாலும் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சிறுகச் சிறுக சிதைத்து இன்றைக்கு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது. அவரை உயிரோடு தாயகத்திற்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் வென்றிருப்பது மத்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் தான்.

சீமான்

பெற்ற மகனை ஒரு முறையாவது உயிரோடு பார்த்துவிட வேண்டுமென 33 ஆண்டுகளுக்கும் மேலாக கவலை தோய்ந்த இதயத்தோடும் கண்கள் நிறைந்த கண்ணீரோடும் காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம் இறுதிவரை நிறைவேறவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க இந்திய  மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென  வலியுறுத்துகிறேன்.

இத்துயர்மிகுந்த சூழலில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ளவர்களையாவது திமுக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்” என்று  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web