ஆசிய விளையாட்டுப் போட்டி.. கோல்ப் பிரிவில் முதல்முறையாக பதக்கம் வென்று இந்தியா அசத்தல்..!
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்திய அணி சிறப்பாக பங்கேற்று பதக்க வேட்டைகளில் ஈடுப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது. 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 361 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தியது.
அதேப்போல் கோல்ப் போட்டி தனிப் பிரிவில் வீராங்கனை அதிதி அசோக் பங்கேற்று சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதனால் ஆசியப் போட்டியில் கோல்ப் தனி நபர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.
மேலும் இந்தியா இதுவரை 11 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...