உலகப் பெரும்பணக்காரர் வாரன் ஃபபெட்டின் நீண்டகால நண்பர் சார்லி முங்கர் காலமானார்!

 
சார்லி முங்கர்

உலகப் பெரும் பணக்காரரும், வெற்றிகரமான தொழில் முதலீட்டாளருமாக இன்று வரை கருதப்படும் வரான் பஃபெட்டின் நீண்டகால நண்பரும், தொழில் பங்குதாரருமான சார்லி முங்கர் காலமானார். அவருக்கு வயது 99.

வரான் பஃபெட் நிறுவிய பெர்க்சையர் ஹதாவே நிறுவனத்தில் துணைத்தலைவராக, கடந்த கடந்த 1978ல் இணைந்த சார்லி முங்கர், கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அந்த பதவியிலேயே வெற்றிகரமாக நீடித்தார். சார்லி முங்கர் அந்நிறுவனத்தில் துணைத்தலைவராக பதவியேற்ற போது சிறிய டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமாக இருந்தது. அதன் பின்னர், பெர்க்சையர் ஹதாவே நிறுவனத்தை, பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தமான நிறுவனமாக வளர்த்தெடுத்தார் சார்லி முங்கர். இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை சார்லி முங்கர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

வாரன் பஃபெட்டுடன் சார்லி முங்கர் (வலது).

தனது நீண்டகால நண்பரும், தொழில் பங்குதாரருமான சார்லி முங்கரின் மறைவு குறித்து வாரன் பஃபெட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'சார்லி முங்கரின் வசீகரம், அறிவு, பங்களிப்பு ஆகியவை இல்லாமல் பெர்க்சையர் ஹதாவே இவ்வளவு பெரிய புகழை எட்டியிருக்க முடியாது. அவரும் நானும் உறுதியான மன நிலையைக் கொண்டவர்கள். எங்களிடையே ஒரு முறைகூட விவாதம் எழுந்ததில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பெர்க்சையர் ஹதாவே நிறுவனம்

வாரன் பஃபெட்டை போலவே, அமெரிக்காவின் ஒமாஹாவில் கடந்த 1924-ல் பிறந்து வளர்ந்தவர். சார்லி முங்கரும், வாரன் பஃபெட்டும் தங்களது இளமை காலத்தில் அதாவது கடந்த 1959-ல் முதன் முதலாக சந்தித்தனர்.

அன்று முதல் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களது நட்பு தொடர்ந்து வந்துள்ளது. பல ஆயிரம் கோடிகளை சார்லி முங்கரும் சம்பாதித்தவர் என்றாலும் தனது செல்வத்தின் பெரும் பகுதியை அறக்கட்டளைகளுக்கு தானமாக வழங்கியிருந்தார். தனது கடைசி மூச்சு வரையில், பெர்க்சையர் ஹதாவே நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக சார்லி முங்கர் ஓய்வு பெறவில்லை. வரும் 2024 ஜனவரி 1-ம் தேதி தனது 100வது வயதை எட்டவிருந்த சார்லி முங்கர் அதற்கு முன்னதாகவே மறைந்து விட்டது பெரும் சோகம் தான். நட்புக்கு இலக்கணமாக இருந்து வந்தவர்களில் சார்லியின் மறைவு வாரன் பஃபெட்டை பெரிதும் கலங்க செய்திருக்கிறது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web