கும்பமேளாவில் புனித நீராடி திரும்புகையில் சோகம்... கார் விபத்தில் 5 பேர் பலி!

 

கும்பமேளாவில் கலந்துக் கொண்டு புனித நீராடி விட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளா விழவில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து புனித நீராடிச் செல்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் தியோலி பகுதியைச் சேர்ந்த முக்த் பிஹாரி தனது மனைவி ஹுடே தேவி மற்றும் குடும்ப உறுப்பினர்களான நந்தி சோனி, ராகேஷ் மற்றும் நபிர் ஆகியோருடன் கும்பமேளாவிற்குச் சென்றார்.

இந்த நிலையில், இன்று கும்பமேளாவிற்குச் சென்றுவிட்டு அனைவரும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ஓட்டிச் சென்றவர் திபேஷ் பர்வானி. ராஜஸ்தான் மாநிலம் துஷா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ​​ஓட்டுநர் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில், காரில் இருந்த 5 பயணிகளும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த திபேஷ் படுகாயமடைந்தார்.

இதேபோல், லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளரும் படுகாயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்த 3 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இறந்த 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?