undefined

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

 
 

அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த 10 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு அருகே வைத்து கைது செய்யப்பட்ட அவர்களின் விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதுடன், அவர்களின் விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுமையாக்கப்படுகிறது. மீனவர்களை விடுவிப்பதற்காக பல லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

இந்த தொடர் கைது நடவடிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!