தேர்வில் தோல்வி அடைந்ததால் 10 ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!கதறி துடித்த பெற்றோர்!!

 

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ட்கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கே சின்னமலைபட்டியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும்   பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  சின்னமலைபட்டியில் வசித்து வரும் கூலித்தொழி தம்பதி வீரமணி, மல்லிகா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இவர்களது மகன் சிவா அருகிலுள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். சிவா  ஏப்ரல் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.  இதில்  500-க்கு 158 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தான்.

தமிழ் மற்றும் கணிதப் பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில் தமிழ், கணிதப் பாடங்களில் தோல்வியடைந்த விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டு சிவா தற்கொலை செய்து கொண்டான்  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 6 – 20 வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில் மாநில பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை மே 19ம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். தவிர, பள்ளிகளில் மாணவர்கள் கொடுத்திருக்கும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!