அடுத்த 2 மணிநேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த சில மணிநேரங்களுக்கு பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று காலை 10 மணி வரை அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 13 முதல் 18 வரை தென் தமிழகத்தின் சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை தொடர வாய்ப்பு உள்ளது. சென்னையும் புறநகர் பகுதிகளிலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!