பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பரிதாப பலி!
Jan 31, 2026, 15:35 IST
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முடுக்கன்குளம் பகுதியில் பால் டேங்கர் லாரி மோதியதில் 7 மாடுகள் உயிரிழந்தன. கூட்டமாக சென்று கொண்டிருந்த மாடுகள் மீது லாரி தாறுமாறாக சென்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் 7 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் 5க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்தன. காயமடைந்த மாடுகள் சிகிச்சைக்காக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். லாரி ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!