undefined

9 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

 

தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. விசைப்படகுகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்கும் நடவடிக்கையும் தொடர்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதில் இருந்த 9 மீனவர்களை கைது செய்து 2 நாட்டுப்படகுகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பிறகு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களின் குடும்பங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!