பாரீஸ் லூவ்ரே அருங்காட்சியகத்தில் ரூ.900 கோடி பொருட்கள் கொள்ளை!
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்த பிரசித்தி பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம், ஈபிள் கோபுரத்துக்கு இணையான புகழைப் பெற்றது. லட்சக்கணக்கானோர் தினமும் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடுகின்றனர். ஆனால், கடந்த மாதம் வைர கிரீடம், நெக்ளஸ் போன்ற சுமார் ரூ.900 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இதற்காக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த சம்பவம் அருங்காட்சியக பாதுகாப்பின் மீது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால், அருங்காட்சியகத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இயக்குனர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ் தெரிவித்தார்.
பாதுகாப்பு மேம்படுத்தும் நடவடிக்கையின் பகுதியாக, அருங்காட்சியக வளாகத்தில் 100 புதிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவும் திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!