நடிகர் சிவாஜி கணேசனின் மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்!!

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களில் ஒருவர்  ராம்குமார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் தலைகாட்டியுள்ளார். இவருடைய மனைவி அபிராமி.  மகன் துஷ்யந்த்.இருவரும் இணைந்து மயிலாப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.  

வர்த்தக நடவடிக்கைகாக  சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்  ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலையை 2019ல் அளித்துள்ளார். ஆனால் வங்கியில் பணமின்றி 2 காசோலைகளும் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் துஷ்யந்த் காசோலை அளித்து ஏமாற்றி இருப்பதாக அந்த வர்த்தக நிறுவனம் சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து  இந்த பணத்திற்கு ராம்குமார் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதால்  அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணையில் சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றம்  நடிகர் துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி, தந்தை ராம்குமார் இவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!