அஜித்தின் ‘துணிவு’ திரையிடப்பட்ட தியேட்டருக்குள் போதை ஆசாமி வெறிச்செயல்! கட்டி வைத்து உதைத்த ரசிகர்கள்!

 

ரொம்ப வருஷங்கள் கழித்து இந்த பொங்கல் தமிழகத்தில் ‘தல’ ‘தளபதி’ பொங்கலாகவே கொண்டாடப்பட்டது. ஒரு ரசிகனின் உயிரையும் காவு வாங்கியது. யார் படம் அதிக கலெக்‌ஷன் செய்தது என்று இன்று வரையில் அடுத்த சர்ச்சை நடந்து வருகிறது. 100 கோடி கலெக்‌ஷனை எல்லாம் தாண்டி, ரூ.200 கோடி வசூல் சாதனை என்று இரு படங்களைச் சார்ந்தவர்களும் மார்தட்டுகிறார்கள். ஆனால், அடுத்த தலைமுறை சீரழிவது பற்றி இரு டாப் நடிகர்களுமே வாய் திறக்கவில்லை.

நடிகர் அஜித்தாவது, உங்க குடும்பத்தைப் பாருங்க.. ரசிகனும் வேண்டாம்.. மன்றமும் வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், கட்-அவுட் கலாசாரத்தை இருவருமே எதிர்க்கவில்லை. இந்நிலையில், அஜித் படமான துணிவு திரையிடப்பட்டிருக்கும் திரையரங்கில் மது போதையில் வந்த ஆசாமி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் அஜித்தின் ‘துணிவு’ படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திரையரங்கிற்குள் நுழைந்த போதை ஆசாமி ஒருவர், திடீரென அங்கிருந்த வாகனங்களை கீழே தள்ளிவிட துவங்கினார்.

இதனைக் கண்ட அங்கிருந்த பணியாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் ஆத்திரம் அடைந்த போதை ஆசாமி திடீரென பணியாளர்களை சரமாரியாக தாக்கத் துவங்கினார். அதன் பின்பு திரையரங்கிற்கு உள்ளே நுழைந்து அங்கிருந்த சேர்களை தரையில் அடித்து உடைத்தார். தொடர்ந்து ஒரு மணி நேரமாக அப்பகுதியில் ரகளை ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதனைக் கண்ட படம் பார்க்க வந்த ரசிகர்கள் அவரை அடித்து உதைத்து கயிறு கொண்டு கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.விசாரணையில் அவர் சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் 7ம் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். திடீரென திரையரங்குக்குள் நுழைந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்