நாய்க்குட்டிக்காக தலைகீழாக தொங்கிய ராணுவ வீரர்!! வைரலாகும் வீடியோ!!
கடந்த சில மாதங்களாக ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் மனிதர்கள் மட்டுமில்லை அங்கு வசித்து வரும் விலங்குகளும் ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றன. அவைகளுக்கும் மீட்பதற்கு உதவி தேவைப்படுகின்றது. வெடிகுண்டு வீசப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக அவசரகால ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
உக்ரேனிய சிப்பாய்களில் ஒருவரை தலைகீழாக குழிக்குள் தொங்கவிட்டு, அவரது கால்களை பிடித்துக் கொண்டு குழிக்குள் இறங்க உதவினர். சில வினாடிகளுக்குப் பிறகு, சிப்பாயின் தோழர்கள் அவரை வெளியே இழுப்பதைக் காணலாம். அந்த சிப்பாய் வெளியில் வரும் போது அவருடைய கையில் சின்னஞ்சிறிய நாய்க்குட்டி ஒன்று இருக்கிறது. இந்த போரில் உக்ரைன் ஒரு நிலையான முன்னேற்றத்தை பெற்றுள்ளது. இதன் விளைவாக கர்சன் பகுதியில் தங்கள் படைகளை விலக்கிக்கொள்ள ரஷ்ய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!