காதலுக்கு துரோகம்.. இன்னொருத்தனையும் காதலிச்சுக்கிட்டு இருந்ததால காதலியைக் குத்தி கொன்ற இளைஞர்! ஈரோட்டில் பரபரப்பு!

 

ரெண்டு வருஷ காதல்.. தன்னைக் காதலித்துக் கொண்டே, இன்னொருத்தரையும் இளம்பெண் ஒருவர் தொடர்ந்து காதலித்து வந்ததால், உண்மை தெரிந்ததும் காதலியைப் பட்டப்பகலில் குத்தி கொலைச் செய்துள்ளார் இளைஞர் ஒருவர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பொதுப்பணித்துறை பணியாளர் குடியிருப்பில் சந்தோஷ் (32), என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சந்தோஷ் இருசக்கர வாகன மெக்கானிக் பணி செய்து வருகிறார்.

இவருக்கு, பவானி சாகர் கூலிங் லைன் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பெண்,தற்காலிக திடக்கழிவு மேலாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். பழக்கம் நெருக்கமாக மாறி அந்த பெண்ணும், சந்தோஷூம் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சந்தோஷ் காதலித்த பெண் வேறு ஒருவரையும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும் ஆத்திரமடைந்த சந்தோஷ் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தனது நண்பர் காந்தனுடன், காதலி வேலைப் பார்க்கும் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்து செல்போனில் பேசிய சந்தோஷ், காதலியை வெளியே வரச் சொல்லியுள்ளார். வெளியே வந்த அந்த பெண்ணுக்கும், சந்தோசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கன்னம், வலது தோள்பட்டை, விரல்கள், மணிக்கட்டு என பல இடங்களில் சரமாரியாக சந்தோஷ் குத்தினார். அப்போது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து, அந்த பெண்ணை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பவானி சாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சந்தோசையும், காந்தனையும் கைது செய்தனர். பட்டப்பகலில் இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க