தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!! சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பு!!
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம். இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜெய்சால்மர் நகரில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானம் ஒன்று வந்து சேர்ந்தது.
இந்த விமான சீட்டின் இருக்கையில் இந்தியில், இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த பயணி விமான நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஸ்பைஸ்ஜெட் தனியார் விமான நிறுவனம் காவல்துறைக்கு தகவல் அளித்தது. மற்ற விமானங்களிலிருந்து தனியாக கொண்டு செல்லப்பட்டு முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அத்துடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து 2 மணி நேரம் விமானம் முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த விமானத்தில் வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. வெறும் புரளி தான் எனத் தெரிந்த பிறகு மிரட்டல் விடுத்த நபர் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!