நண்பர்களுடன் தண்ணீரில் கொண்டாட்டம்.. படகிலிருந்து வீழ்ந்த கல்லூரி மாணவர் பலி!

 

நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர், படகில் இருந்து தவறி ஓடையில் விழுந்து உயிரை இழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், தங்களது நண்பனின் உடலை சடலமாக மீட்டெடுத்து கதறியழுதனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெனிஷ்டோ. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த ஜெனிஷ்டோ, பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, ஜெனிஷ்டோ தனது நண்பர்கள் 10 பேருடன் சிறிய படகு மூலம் அனல் மின் நிலையம் அருகே உள்ள உப்பாற்று ஓடையில் உற்சாகமாக இருக்க சென்றுள்ளனர்.

இதில் சிறிய படகில் வைத்து நண்பர்கள் அனைவரும் நடனம் ஆடியுள்ளனர். இதில் படகு தலைகிழாக கவிழ படகில் இருந்த மாணவர் ஜெனிஷ்டோ உள்ளிட்ட 10 பேர் உப்பாற்று ஓடையில் தவறி விழுந்துள்ளனர். இதில் 9 பேர் ஓடையில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளனர். ஆனால் உப்பாற்று ஓடையில் ஆழத்தில் சிக்கிய ஜெனிஷ்டோ மட்டும் வெளியே வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெனிஷ்டோவின் நண்பர்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதை அடுத்து தெர்மல் நகர் போலீசார் இன்று அதிகாலை சுமார் இரண்டு மணி நேரம் உப்பாற்று ஓடை பகுதியில் சிறிய படகில் மீனவர்களுடன் சென்று வாலிபர் உடலை தேடி வந்தனர்.

இதை தொடர்ந்து முட்புதரில் சிக்கி இருந்த ஜெனிஷ்டோவின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்