சாலை தடுப்பு சுவரில் மோதிய கல்லூரி பேருந்து !! 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் செயல்பட்டு வருகிறது தனியார் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரி நந்தம்பாக்கத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
மோகன்ராம் பேருந்தின் ஓட்டுனர். பேருந்து குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், சிறுகளத்தூர் அருகே குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதிவிட்டது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கம்பிகளில் மோதி டிரைவர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் ஓடி வந்து பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் குன்றத்தூரில் இருந்து வரும் 19 வயது ஹேமாவுக்கு மட்டும் காயம் பலமாக பட்டதால் அவர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய கல்லூரி பேருந்து கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கல்லூரி பேருந்து வெகுவேகமாக வந்ததாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்தனர். இந்த வேகம் தான் விபத்துக்கு காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!