அப்பாவ நம்பாதே.. மகனுக்கு ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு தாய் தற்கொலை!

 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது மகனுக்கு உருக்கமாக வாய்ஸ்-அப்பில் வாய்ஸ் மெஸேஜ் அனுப்பி விட்டு, தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் மகேஸ்வரி. இந்த வாய்ஸ் மெசேஜ் மூலமாக கணவரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கருதுப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டியன்(48). இவரது மனைவி மகேஸ்வரி (40). இவர்களுக்கு ஹரிஷ்(15), பிரதீஸ் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர். மகேஸ்வரி, சென்னையில் தனது மகன்களுடன் தங்கி இருந்து வந்தார். மகன்கள் இருவரும் சென்னையில் படித்து வருகின்றனர். பாண்டியன் கருதுபட்டியில் சொந்தமாக மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வந்தார். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக கணவர் வீட்டிற்கு மகேஸ்வரி சென்றுள்ளார். அதன் பின்னர், இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிவகங்கை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சிபிசாய் சவுந்தர்யன், தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் மகேஸ்வரியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மகேஸ்வரி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக மகேஸ்வரி, தனது மூத்த மகனுக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், “தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள், நன்றாக படி, என்னுடைய இறப்பிற்கு காரணம் உன்னுடைய அப்பா தான், அவரை நம்பாதே..”  என அழுதபடியே, என்னை மன்னித்துக் கொள்” என்று பேசி உள்ளார். இந்த ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இது குறித்து மகேஸ்வரியின் அண்ணன் பாலசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!