பெரும் சோகம்! கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி! உடல் சிதறி பலியான காதலி! காதலன் கவலைக்கிடம்!

 

சென்னையில் நேற்று இரவு, கட்டிப் பிடித்த படியே தாம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த சென்னையில் புறநகர் ரயில் முன்பாக இளம் காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்வதற்காக பாய்ந்தனர்.   திடீரென இளம் ஜோடி ஒன்று ரயில் முன்பாக பாய்ந்து, தற்கொலை முயற்சி செய்வதை அறிந்த ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்த முயன்றார். ஆனாலும், ரயில் முன்பாக பாய்ந்ததில், காதலியின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில், காதலன் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்து, காதலனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காதலர்களின் செல்போன்களை எடுத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய காரணத்தினால் இருவரின் செல்போன்களும் நொறுங்கி உள்ளதால், போலீசார் விசாரணையை முடக்கி உள்ளனர். 

பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் பெயர் இளங்கோ என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!