எனக்கு படிக்க பிடிக்கல!! கடிதம் எழுதி வைத்து விட்டு +2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!
சென்னை ஆவடியில் வசித்து வருபவர் 47 வயதான விஜயன். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 17 வயதில் பாலாஜி என்ற மகனும், 14 வயதில் ஹரிணி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வந்தனர். சனிக்கிழமை மாலை கணவன், மனைவி இருவரும் பொங்கலுக்கு துணி எடுக்க ஆவடி மார்க்கெட் பகுதிக்கு சென்றிருந்தனர்.
வீட்டில் பாலாஜியும், அவரது தங்கை ஹரிணியும் மட்டுமே. அவர்கள் கிளம்பியதும் சிறிது நேரத்தில் பாலாஜி, படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அண்ணன் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹரிணி, கதவை தட்டினார். திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். அப்போது பாலாஜி, தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதார். ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலாஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் பாலாஜியின் அறையில் சோதனை செய்த போது தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் "நீங்கள் விரும்பும் படிப்பை எனக்கு படிக்க விருப்பம் இல்லை. என் இஷ்டத்துக்கு வாழ விடுவதில்லை.
30 வயதுக்கு மேல் திருமணமாகி வேலைக்கு போன பிறகு தான் நான் ஜாலியாக இருக்க முடியுமா?. நான் உயிருடன் இருந்து என்ன பண்ணப்போகிறேன். என் தங்கையாவது நல்லா இருக்கட்டும்" என உருக்கமாக எழுதி இருந்தார். பாலாஜி, பள்ளிப்படிப்புடன் ஜே.இ.இ. தேர்வுக்கும் பயிற்சி பெற்று வந்தார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் பாலாஜி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!