ரூ.10 நாணயங்களை  வாங்க மறுத்தால் நடவடிக்கை!! போக்குவரத்து கழகம் எச்சரிக்கை!!

 

தமிழகம் முழுவதும் பேருந்து, காய்கறி, பூ, பழம், டீக்கடை தொடங்கி  பிரம்மாண்ட ஷாப்பிங் ஸ்டோர்ஸ் , பெரிய ஷாப்பிங் மால்களிலும் நாணயங்களை வாங்குவதில்லை என தொடர் புகார்களும், குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன. இது குறித்து போக்குவரத்து கழக்கம் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

 இந்தியாவை பொறுத்தவரை  ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை ரிசர்வ் வங்கி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ரூ.10 நாணயங்கள் செல்லாது எனவே நெடுநாட்களாக கூறிவந்தனர்


இந்நிலையில் அரசுப்பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை நடத்துனர்கள் வாங்க மறுத்தால் பயணிகள் புகார் அளிக்கலாம். அத்துடன் பேருந்துகளில் பயணிகள் தரும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணசீட்டு வழங்க வேண்டும் எனவும்   நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!