பெற்றோரை தாக்கி விட்டு இளம்பெண் கடத்தல் !! பரபரப்பு வீடியோ!!
தெலுங்கானாவில் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்கயாம்ஜல் நகராட்சி பகுதி மருத்துவர் வைஷாலி. 24 வயதாகும் வைஷாலி அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். 100 பேர் கொண்ட கும்பல் இவரது வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடி விட்டு பெண் மருத்துவரையும் காரில் கடத்தி சென்று விட்டது.
அவர்களை தடுக்க முயன்ற பெற்றோரையும் அந்த கும்பல் விட்டுவைக்கவில்லை. கம்புகள், கட்டைகளை கொண்டு கடுமையாக தாக்கிவிட்டு சென்றதில் வைஷாலியின் தந்தை படுகாயமடைந்து உள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காதல் விவகாரத்தில் வைஷாலியை கடத்தியிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!