காதலிச்சு கல்யாணம்.. திருமணமான ரெண்டே மாசத்துல ஒரே கயிற்றில் தம்பதியினர் தற்கொலை!

 

காதல் வேறு.. திருமண வாழ்க்கை வேறு.. என்பதைப் புரிந்துக் கொள்ளாத ஜோடி.. என்று அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் புலம்பி தள்ளுகின்றனர். ரெண்டு பேரும் அன்பா தான் இருந்தாங்க.. ஜோடியா தான் வெளியே போய் வந்துக்கிட்டு இருந்தாங்க என்று ப்ச்சு கொட்டுகிறார்கள். காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிகிட்டாலும், யார் அன்புல குறை இருந்ததுன்னு தெரியலையே என்று பெற்றோர்கள் இன்னொரு பக்கம் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள். திருமணமான ரெண்டே மாசத்துல ஜோடியா ஒரே கயிற்றில் பிணமாக தொங்குவதற்காக திருமணம் செய்து வெச்சோம் என்று உறவினர்கள் கதறுகிறார்கள். 

தூத்துக்குடி, தருவைகுளம் அனந்தமாடன் பச்சேரி காலனியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகன் தங்க முனியசாமி (28). முனியசாமி, அதே பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். விளாத்திகுளம் அருகே உள்ள துவரங்கை பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (22).  அனந்தமாடன்பச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சீதாலட்சுமி அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

அப்போது, தங்க முனியசாமிக்கும், சீதாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து 2 பேரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு அனந்தமாடன் பச்சேரியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம் போல மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறக்க முயன்று உள்ளனர். ஆனால் உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் தருவைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தருவைகுளம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒரு கயிற்றின் ஒரு முனையில் தங்க முனியசாமியும், மற்றொரு முனையில் சீதாலட்சுமியும் தூக்கு போட்டு இறந்த நிலையில் கிடந்தனர். இதைத் தொடர்ந்து தருவைகுளம் போலீசார் இறந்த கணவன், மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமணமான 2 மாதத்தில் கணவன், மனைவி இறந்து உள்ளதால் உதவி ஆட்சியர் கவுரவ்குமார் விசாரணை நடத்தினார். புதுமண காதல் தம்பதிகள் ஒரே கயிற்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!