இன்னும் 2 நாள் தான் இருக்கு.. ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க கடைசி தேதி!
மின் இணைப்பு பெற்றிருப்பவர்கள், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான கடைசி தேதியாக ஜனவரி 31ம் தேதியை அறிவித்திருந்த நிலையில், இன்னமும் பலரும் இணைக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைப்பெற உள்ளது.
முன்னதாக டிசம்பர் 31ம் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமானவர்கள் மின் இணைப்பு எண்ணை இணைக்காததால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 31ம் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் சார்பில் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது. மின் நுகர்வோர்கள் இணையதளம் மூலமாகவும் நேரடியாக சிறப்பு முகாம்கள் மூலமாகவும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் 2.04 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!