நகைக்கடைக்குள் புகுந்த மணல் லாரி!! 6 பேர் படுகாயம்!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆசனூர் மணல் குவாரியில் இருந்து மணல் லாரி ஒன்று மணல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. நடுக்கடை பகுதிக்கு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் ஸ்டியரிங் உடைந்து விட்டது.
இதனால் மணல் லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் நடந்துசென்ற பெண் மீது மோதி அங்குள்ள ஜெராக்ஸ் மற்றும் நகைக் கடைகளுக்குள் புகுந்துவிட்டது. இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுநர் வீரமணி, சாலையில் நடந்து சென்ற இளம்பெண் என 6 பேர் படுகாயமடைந்தனர்.இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் தஞ்சாவூர்- அரியலுர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் இந்த விபத்து குறித்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இவை தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!