அதிர்ச்சி!! பள்ளிச்சிறுவன் மாரடைப்பால் மரணம்!! கதறி துடித்த பெற்றோர்!!

 

50 அல்லது 60 வயதுக்கு மேல் தான் இதயம் சம்பந்தமானந் நோய்கள் வரும் என்ற நிலைமை மாறி வருகின்றது. இந்த அவசர யுகத்தில் 25 வயது என்ற நிலையும் மாறி பள்ளிப் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு  மாவட்டம், குஷால்நகர் தாலுகா கூடு மங்களூரு பகுதியில் வசித்து வருபவர் மஞ்சாச்சாரி. இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவரின் மகன் 12 வயது  கீர்த்தன்.இவர்  6ம் வகுப்பு படித்து  வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அருகில்  உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.


மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த போது அவன் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதை கேட்டு  பெற்றோர் கதறி துடித்தனர். மிகவும் சின்னஞ் சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!