கல்லூரி வளாகத்தில் பயங்கரம்!! மாணவிக்கு சராமாரி கத்திக்குத்து!! 

 

பார்க்காமலே காதல், பேசாமலே காதல் என்று இருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இனி அதை கதைகளில் மட்டுமே காணமுடியும் .  இப்போதெல்லாம் சொல்பேச்சு கேட்கலன்னா அவளை வெட்டு, குத்து ,ரயிலில் தள்ளி கொலை செய், விஷம் வைச்சிடு, வெட்டி கூறு போட்டு நாய்க்கு போடு என பயங்கரமாக மாறி வருகிறது. அதே போல் ஒரு சம்பவம் மீண்டும் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகா முல்பாகல் காஜிபுரா கிராமத்தில் வசித்து வருபவர் 19 வயது  லயசிதா . இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் , கல்லூரிக்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி படித்து வருகிறார். நேற்று காலையில் அவர் வழக்கம் போல கல்லூரிக்கு வந்த லயசிதாவை பார்க்க வேறு ஒரு  தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வரும் பவன் கல்யாண், பார்க்க வந்திருந்தார்.


இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. அந்த சந்தர்ப்பத்தில் திடீரென்று ஆத்திரமடைந்த பவன் கல்யாண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லயசிதாவை பல இடங்களில் சரமாரியாக குத்தினார். அதே கத்தியால் பவன் கல்யாணும் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.  கல்லூரியில் இருந்த சகமாணவர்கள், ஊழியர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு லயசிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே  உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பவன் கல்யாணுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  தீவிர விசாரணை நடத்தினார்கள். காதல் விவகாரத்தில் லயசிதாவை கொலை செய்து விட்டு, பவன் கல்யாண் தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன..2 பேரின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் கல்லூரிக்குள் புகுந்து மாணவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!