பிறந்தநாளில் டிக்டாக் பிரபலம் மரணம்! 10வது மாடியில் இருந்து குதித்த கொடூரம்! சந்தேக வழக்காக பதிவு!

 

தனது பிறந்தநாளில், குடியிருப்பின் 10வது மாடியின் உச்சிக்கு சென்று, மாடியில் இருந்து கீழே குதித்து டிக்டாக் பிரபலமான டான்சர் ரமேஷ்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

தனது மைக்கேல் ஜாக்சன் ஸ்டைல் நடனத்தின் மூலமாக விரைவாகவே டிக்டாக், இன்ஸ்க்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் லைக்ஸ்களையும், அதிகளவிலான பாலோயர்களையும் அள்ளிய டான்சர் ரமேஷ் (42), ரசிகர்களிடையே வெகு சீக்கிரத்தில் பிரபலமானார். இவரது வீடியோ பதிவேற்றப்பட்ட சில நொடிகளிலேயே ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும், ஷேர்களும் குவிந்தன.

சென்னை மூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த டான்சர் ரமேஷூக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சித்ரா தனது இரு மகள்களுடன் மூர் மார்கெட் பகுதியிலும், இரண்டாவது மனைவி புளியந்தோப்பு கே.பி பார்க் அடுக்குமாடி குடியிருப்பிலும் வசித்து வருகின்றனர்.

மார்க்கெட் பகுதியில் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி ரமேஷ் வெளியிட்ட வீடியோ வைரலானது. இதன் மூலம் பிரபல தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்க ரமேஷுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பிரபலமான டான்சர் ரமேஷுக்கு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ மற்றும் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜெயிலர்’ ஆகிய படத்திலும் சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்நிலையில் டான்சர் ரமேஷ் நேற்று மாலை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது 2வது மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சுமார் 6 மணியளவில் டான்சர் ரமேஷ் திடீரென பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ரமேஷ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரமேஷுக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் வசிக்கும் 2வது மனைவி இன்பவள்ளி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் பிறந்த நாள் பார்ட்டி வைப்பதற்காக தனது மனைவி இன்பவள்ளியிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார். அவர் பணம் தராத காரணத்தால் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

மேலும் ரமேஷ் பிரபலமாகி தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற ஆரம்பித்த பின்பு, அவரது முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது மனைவி இன்பவள்ளி டான்சர் ரமேஷைக் கடத்தி சென்று விட்டதாக முதல் மனைவி சித்ரா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடைபெற்றது தெரியவந்தது.

அதன் பிறகு இரு மனைவிகளுக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது மனைவி இன்பவள்ளி தங்கியிருக்கும் குடியிருப்பில் ரமேஷ் இறந்த சம்பவம் போலீசாருக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தாலும் , அதிக குடிப்பழக்கம் கொண்ட டான்ஸர் ரமேஷ் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பணம் தராததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!