17 வயது சிறுவனை செக்ஸ் போதைக்கு அடிமையாக்கிய 33 வயது பெண்! போலீசார் விசாரணையில் பரபரப்பு!

 

செங்கல் சூளையில் உடன் வேலைப் பார்த்து வந்த 17 வயது சிறுவனுக்கு பாலியல் ஆசைக் காட்டி, தொடர்ந்து உடலுறவு கொண்டு, பலாத்காரம் செய்து, அவனை செக்ஸ் போதைக்கு அடிமையாக்கிய 33 பெண்ணை போலீசார் கன்னியாகுமரி மாவட்டத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்து, போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர். 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை ஒன்றில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி விட்ட நிலையில், கணவனுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில், அதே செங்கல் சூளையில் வேலைப் பார்த்து வந்த 17 வயது சிறுவனுடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகமானதும், ஒரு கட்டத்தில் சிறுவனைத் தனியாக அழைத்து சென்று உடலுறவும் கொண்டுள்ளார். சிறுவனுக்கு செக்ஸ் ஆசைக் காட்டி, அடிக்கடி இப்படி சிறுவனுடன் உடலுறவு கொண்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

பெண்ணுடன் உடலுறவு கொள்வதில் சிறுவனுக்கும் நாட்டம் அதிகரித்து, இருவரும் இன்னும் அதிக நெருக்கத்துடன் பழக ஆரம்பித்தனர். இவர்களது நெருக்கம் அதிகமானதன் விளைவாக, ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்து கடந்த 19ம் தேதி விருதுநகர் செங்கல்சூளையில் இருந்து தப்பியோடி உள்ளனர். இருவரையும் ஒரே நேரத்தில் காணாதது குறித்து சந்தேகமடைந்த சக தொழிலாளிகளும், இருவரது குடும்பத்தினர் அவர்களை பல இடங்களில் தேடி வந்தனர்.

இருவரும் எங்கு தேடியும் கிடைகாத நிலையில்,  சேத்தூர் காவல் நிலையத்தில் இவர்கள் காணாமல் போனது குறித்து இரு வீட்டாரும் புகார் அளித்தனர். இவர்களின் புகாரின் பேரில் சேத்தூர் மற்றும் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் இருவரும் கன்னியாகுமரியில் தனியே வீடு எடுத்து, வசித்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க கன்னியாகுமரிக்கு போலீசார் விரைந்து சென்றனர்.

கன்னியாகுமரி சென்ற போலீசாரை கண்டதும் இருவரும் தப்பியோட முயன்றனர். இதையடுத்து, போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து சேத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டத்தில் அந்த பெண்ணை கைது செய்தனர். சிறுவனுக்கு அறிவுரைக் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!