இரும்பு லோடு வேன் மோதி 7 வயது சிறுவன் பலியான சோகம்!

 

சேலம் தாராபுரம் அருகே இரும்பு லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், 7 வயது பள்ளி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அசோக் நகரைச் சேர்ந்தவர் அப்துல் நவ்பில்(32).  இவரின் மனைவி நிலோபர் நிஷா (28). இவர்களுக்கு முகமது நவ்பில் என்று 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், இவர்கள் மூவரும் சேலம் தாராபுரம் பகுதியில் வசிக்கும் தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று  கொண்டிருந்தனர்.

அப்போது ஈரோடு - காங்கயம் வழியாக தாராபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது காங்கயம் பிரிவு சாலை அருகே திருப்பூரில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு  வந்து கொண்டிருந்த சரக்கு வேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மூவருமே தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். சிறுவன் முகமது நவ்வில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாராபுரம் போலீசார், சிறுவன் உடலை மீட்டு தாராபுரம் அரசு மருத்துமவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கணவனையும், மனைவியையும் மருத்துமவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விருதுநகர் மாவட்டம் முள்ளிசேவல் பகுதியை சேர்ந்த வேன் ஓட்டுநரான சங்கர பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்