10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்.. கண்டித்த தாயால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!!

 

அம்மா நன்றாக படிக்கச் சொன்னதால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கார்த்திகாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட நேதாஜி நகரில் வசிப்பவர் வெங்கடேசன் என்ற முடிதிருத்தும் தொழிலாளி. இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும், 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனை அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வெங்கடேசன் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். மகன் பவன்குமார் (வயது 15) வீட்டில் இருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த அரையாண்டுத் தேர்வில் மாணவி 60% மதிப்பெண் பெற்றதாகவும், நன்றாகப் படிக்குமாறு மாணவனைஅவரது தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தாய் கல்பனா தனது மகளை டியூசனில் இறக்கி விட்டு சென்றார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவர் பவன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வீட்டுக்கு வந்த தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகில் உள்ள விட்டூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் மாணவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருத்தணி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!