விரட்டி விரட்டி கடித்த வெறி நாய்.. வண்டியை கீழே போட்டு தலைதெறிக்க ஓடிய மாணவன்..!!

 

ஆம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவனை துரத்தி துரத்தி கடிக்க வந்த நாய்.. வாகனத்தை கீழே விட்டு விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்த மாணவன்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கியூபா மசூதி  பகுதியை சேர்ந்தவர் சனாவுல்லா இவரது மகன் முஹம்மத்ஷேக்  அதே பகுதியில் இவர் 10 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் இன்று பள்ளி விடுமுறை என்பதால் வாத்திமனை பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் விளையாட தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது வாத்திமனை பகுதியில் வீதியோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை அருகில் இருந்த நாய் ஒன்று முஹம்மத்ஷேக்கை துரத்தி துரத்தி கடிக்க முற்பட்டதில் அதிர்ச்சி அடைந்த மாணவன் வாகனத்தை கீழே விட்டு ஓட முயன்ற  போது கால் பகுதியில் கடித்து குதறியதில் காயமடைந்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை எடுத்துச் செல்லாமல் வீதியோரம் அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளதால் அங்கு நாய்கள் அதிகமாக காணப்படுவதால் இது போன்ற செயல்கள் நடைபெறுவதாக  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!