ஒரு தெருவே காணாமல் போயிருக்கு... கண்டுபிடிச்சு தாங்க... கலெக்டரிடம் ஜிபி முத்து கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் காணாமல் போன தெருவை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நடிகர் ஜி.பி. முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் வட்டம்,காலன் குடியிருப்பு வருவாய் கிராமம் உடன்குடி, பெருமாள் புரத்தில் நத்தம் சர்வே எண் 233 ல் கீழ தெரு என்று ஒரூ தெரு இருந்தது, நத்தம் சர்வே எண் 233/21 இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் திரைபடத்தில் வரும் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போனது போன்று மேற்படி கீழ தெரு என்று ஒரு தெரு இருந்தது தெரியாமல் அந்த தெரு காணாமல் போய் விட்டது.
அந்த தெரு இருந்த இடம் முழுக்க பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கபட்டு உள்ளது. எனவே தாங்கள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!