அடக் கடவுளே... 6 மாத வளர்ச்சியடைந்த கரு... ரத்த வெள்ளத்தில் மாணவி... கல்லூரி வகுப்பறையில் பகீர்... அலறியடித்த மாணவிகள்!

 

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 19 வயதுடைய மாணவி ஒருவர் பி.டெக் இரண்டாம் ஆண்டில்  படித்து வந்துள்ளார். 

இவர் கடந்த கடந்த 11ம் தேதி கல்லூரியின் வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். அப்போது உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி கதவைத் திறக்காததால், சக மாணவிகள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்ததில் மாணவி ரத்தப்போக்குடன் சடலமாகக் கிடந்துள்ளார். மேலும் அவரின் அருகில் ஆறு மாத வளர்ச்சியடைந்த கரு கிடந்துள்ளது. இதனை பார்த்து சக மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் போனை கைப்பற்றி போலீசார் அதனை ஆய்வுக்கு உட்படுத்தினர். பின்னர் இது குறித்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

மாணவி மரணம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவிக்கும் அனந்த சாகரம் பகுதியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை அவர் மாணவியை கர்ப்பமாக்கி விட்டு பின்னர் ஏமாற்றி விட்டாரா? அல்லது கல்லூரியில் ஏதும் அசம்பாவிதம் நடந்ததா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!