கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்..!!

 

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு தீப்பற்றி எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தென்கடல் பகுதியில் காலின்ஸ் என்பவருக்கு சொந்தமான படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 90 லட்ச ரூபாய் மதிப்பிலான படகு முற்றிலும் எரிந்து நாசமானது. 

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காலின்ஸிற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் படகை வந்து பார்த்ததும் கதறி அடித்துக் கொண்டு அழுதார். பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியதாக வேதனை தெரிவித்தார். இதற்கு அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மின்கசிவு காரணமாகவே படகில் தீ பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!