மீன்பிடி வலைகளை உலர வைக்கும் செட்டில் பயங்கர தீ விபத்து!
கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமப் பகுதியில் நாட்டுப் படகு மீனவர்கள் கடற்கரையோரம் வலைகளை உலர வைத்திருந்தனர். இந்த செட்டில் நள்ளிரவுக்கு மேல் திடீரென தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் பலருடைய மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து கருகி நாசமாகின. அப்பகுதி மக்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகியது.
விபத்து குறித்து சுசீந்திரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். திடீர் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாராவது தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!