உஷார் பெண்களே ... கூட்ட நெரிசலில் துணிக் கடையில் கைவரிசை காட்டிய பெண்... உறைய வைக்கும் வீடியோ!
டெல்லியின் இதயப்பகுதியான ஜமா மஸ்ஜித் சந்தையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் நேற்று நடந்த இந்தச் சம்பவம், திருடர்களுக்கு ஒரு தகுந்த பாடமாக அமைந்துள்ளது. மக்கள் கூட்டத்தால் அலைமோதும் அந்தச் சந்தையில், குறிப்பாகத் துணிக் கடைகளில் பெண்களின் கவனச்சிதறலைப் பயன்படுத்திப் பைகளில் இருந்து பொருட்களைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், துணிக் கடைக்குள் நைசாக நுழைந்து மற்றவர்களின் பைகளில் கைவரிசை காட்டிய ஒரு பெண்ணை, வாலிபர் ஒருவர் தனது சமயோசித புத்தியால் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
இருப்பினும், அந்த இளைஞர் விடாமல் அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்தி, கடையில் இருந்தவர்களிடம் வீடியோ ஆதாரத்தைக் காண்பித்தார். வீடியோவில் திருட்டுச் சம்பவம் அப்பட்டமாகத் தெரிந்ததால், அந்தப் பெண் வசமாகச் சிக்கிக் கொண்டார். இந்தத் துணிச்சலான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 'காட்டுத்தீயாய்' பரவி வருகிறது. "திருடன் மட்டுமல்ல, திருடிகளும் ஜாக்கிரதை" என எச்சரிக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. துணிச்சலுடன் திருடியைப் பிடித்துக் கொடுத்த அந்த இளைஞருக்கு இணையவாசிகள் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!