சுற்றுலா வேன் விபத்தில் சிக்கி ஒருவர் பலி, 15 பேர் காயம்!
கடலூர் மாவட்டம் பகுதியில் சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். சிதம்பரம் அருகே சென்ற வேன் சாலை தடுப்பில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வேனில் பயணம் செய்தவர்கள் ஆன்மிக சுற்றுலாவுக்காக சென்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ஆன்மிக பயணமாக வேளாங்கண்ணி சென்றபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!