ரூ.12.56 கோடி தங்கக் கடத்தல்... நடிகை தடுப்பு காவலை ரத்து செய்ய முடியாது... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
துபாயிலிருந்து பெங்களூரு வந்தபோது ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கக் கட்டிகளுடன் சிக்கிய கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரண்யா ராவின் தடுப்பு காவலை ரத்து செய்ய மறுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 3-ஆம் தேதி கெம்பேகவுடா விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட இவர், சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு 100 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கத்தை இந்தியாவுக்குள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும் ஹவாலா வழியாக ரூ.38.4 கோடியை துபாய்க்கு அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் தாமதமானதால் மே மாதம் ஜாமீன் கிடைத்த நிலையில், ‘கோஃபேபோசா’ சட்டத்தின் கீழ் ஏப்ரல் 22-ஆம் தேதி ஓராண்டு தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உரிய ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி நடிகையின் தாயார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், கடத்தலைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தடுப்பு காவல் சட்டப்படி சரியானது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் நடிகை ஓராண்டு சிறையில் தொடர்வது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகையின் வளர்ப்புத் தந்தையான மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே.ராமச்சந்திர ராவ் மீதும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!