நடிகை சமந்தா பழனியில் மனமுருகி பிரார்த்தனை... 690 படிகளிலும் கற்பூரம் ஏற்றி வேண்டுதல்!

 

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு நடிகை சமந்தா, 639 படிக்கட்டுகளிலும் கற்பூரம் ஏற்றி பிரார்த்தனை செய்தப்படி சென்று பழனி முருகனை தரிசித்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

'பானா காத்தாடி' படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நடிகை சமந்தா, அதன் பின்னர், தெலுங்கு திரையுலகில் கால் பதித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். அறிமுகமான பின்னர், தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், தன்னுடைய தோல்  பிரச்சனைகளால் பட வாய்ப்புகள் கை நழுவி சென்றது. பின்னர் சிகிச்சை எடுத்துக் கொண்டு, தமிழிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். 

மேலும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 'குஷி' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட தகவலை நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தானே பகிர்ந்தார். மேலும், அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர், சில நாட்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் படிகளில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால், தனது நோய்காக சமந்தா வேண்டுதல் வைத்து, வழிபாடு நடத்தி வருகிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?