undefined

கலப்பட டீசல் விவகாரம்... கார் உரிமையாளருக்கு  ரூ. 8.19 லட்சம் இழப்பீடு வழங்க பெட்ரோல் பங்க்கிற்கு உத்தரவு !
 

 

 
சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் அஜய் பாஸ்கர். இவர் 2022ம் ஆண்டு சேலம் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்-கில் காருக்கு டீசல் நிரப்பியுள்ளார்.


சிறிது தூரம் சென்ற நிலையில் திடீரென என்ஜீன் பழுதாகி, ரூ 25000  செலவு செய்து காரை சென்னைக்கு கொண்டு வந்து பழுது பார்த்ததாகவும், கலப்பட டீசல் காரணமாக என்ஜின் பழுதாகி இருப்பதால்   பழுதை சரிசெய்ய செலவிட்ட 8 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை வழங்கும்படி சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்-க்கு உத்தரவிடக் கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 

இந்த  வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், காரை பழுது பார்ப்பதற்கான செலவு தொகை 8 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என பெட்ரோல் பங்க்-க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.   இதுதவிர இழப்பீடாக ரூ 10000மும்  வழக்கு செலவுக்காக ரூ 2000மும்  வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?