சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்த இளைஞர்! கட்டையால் அடித்துக்கொலை!

 

சேலத்தை சேர்ந்த இளைஞர் பிரவீன் குமார் (25), திருவள்ளூர் சோழவரத்தில் உள்ள ஆச்சி மசாலா கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி குடும்பத்தினரிடம் பிரவீன் குமார் பேசியுள்ளார். அதன்பின்னர் அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை. பிரவீன்குமார் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 

பிரவீன்குமார் குறித்து அவரது நண்பர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் இல்லை. இதனையடுத்து பிரவீன் குமார் தந்தை சக்திவேல்  சோழவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

போலீசார் நடத்திய விசாரணையில், காணாமல் போன் பிரவீன் குமார் அவரது நண்பர் ராஜேந்திரனுடன் சேர்ந்து அவர் பணிபுரியும் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஜாபர் என்பவரிடம் தகராறு செய்துவிட்டது சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் நல்லூர் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள தாமரை குளத்தில் பிரவீன் சடலமாக மீட்கப்பட்டார். பிரவீன் தலையில் பலத்த காயங்கள் இருந்துள்ளது. 

இதனையடுத்து இதனை கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் கடந்த 20ஆம் தேதி லட்சுமி என்பவரின் டிபன் கடையில் பிரவீன்குமார், ராஜேந்திரன் இருவரும் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தகராறு செய்துவிட்டு சென்றுள்ளனர். 

இதுகுறித்து லட்சுமி தனது மகன் நரேஷ் என்பவரிடம் தெரிவித்துள்ளார். நல்லூர் செல்லியம்மன் கோவில் பகுதியில் இருசக்கரவாகனத்தில் வந்த இருவரையும் மறித்த நரேஷ் ஏன் கடையில் சாப்பிட்டுவிட்டு தினமும் பிரச்னை செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த நரேஷ் தயாராக வைத்திருந்த கட்டையால் பிரவீன் குமாரை துரத்தி சென்று தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலே பிரவீன் குமார் இறந்துள்ளார். இதனையடுத்து நரேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?