உஷார்... இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை!
பத்திரம் மக்களே... இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மே 27ம் தேதி உருவாகவுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மே 25ம் தேதி பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்றும் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!