3 நாட்கள் அனைத்து அரசு விழாக்களும் ரத்து... கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!
கோவா மாநிலம் ஷிர்காவோவில் ஸ்ரீ தேவி லைராய் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவில், திடீர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த திருவிழாவிற்காக இன்று மே 3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் கூட்டமாக கூடியிருந்தனர். குறுகிய வழித்தடங்களில் ஏற்பட்ட நெரிசலில், மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து இந்த சோகம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவா காவல் துறை இயக்குநர் அலோக் குமார் , “கோயில் பகுதியில் இருந்த சரிவில் ஏறத்தாழ 40–50 பேர் விழுந்தனர். இதுவே நெரிசலை உருவாக்கி, பல உயிர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது” இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!