அசத்தலான வரவேற்பு... தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர்! பாதுகாப்பு வளையத்தில் மதுரை!
இன்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு. அவருக்கு பூங்கொத்து கொடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் வரவேற்றனர். ஜனாதிபதி திரெளபதி முர்மு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கார் மூலமாக சென்று அம்மனை தரிசிக்கிறார். அங்கிருந்து கோவை ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகிறார். குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு, மதுரையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது. ரயில் நிலையங்கள், விமான நிலையம், மீனாட்சியம்மன் கோயில், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர், கோவில் நிர்வாகிகள், அலுவலர்களுடனும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
மதுரையில் தீவிர கண்காணிப்புகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டு விட்டது. புதிதாக வருபவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் ஆய்வு செய்யப்பட்ட பிறகு உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். மதுரை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு கருதி ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மனை தரிசித்த பின்னர், இன்று மாலை கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் கலந்து கொள்கிறார். அங்கும் அவரது வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க