undefined

  ஆம்புலன்ஸ்–கார் மோதல்...  4 பேர் படுகாயம்!

 

கோவை மருத்துவமனையில் இறந்தவரின் உடலை கேரளாவுக்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு, இன்று காலை ஆம்புலன்ஸ் ஒன்று கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பயணித்தனர். மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பகுதியில் பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது விபத்து ஏற்பட்டது.

அப்போது கேரளத்தை நோக்கிச் சென்ற காருடன் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதலின் தாக்கத்தில் ஆம்புலன்ஸ் சாலையோரம் கவிழ்ந்தது. கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த இருவரும், காரில் இருந்த இருவரும் காயமடைந்தனர். 4 பேரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!