ஆம்னி பேருந்து கவிழ்ந்து 14 பேர் படுகாயம்... அதிகாலையில் அதிர்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இன்று அதிகாலை ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வழக்கம்போல் சாலையில் பயணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
முன்னால் சென்ற காருடன் மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பேருந்தை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 14 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!