அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை!
அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தைச் சேர்ந்த அலுவலகங்களிலும் இந்த நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
மும்பை நகரில் மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நிதி தொடர்பான விவகாரங்கள் குறித்து இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக அனில் அம்பானிக்கு சொந்தமான ‘அபோட்’ எனப்படும் ரூ.3,716 கோடி மதிப்புள்ள மும்பை வீடு முடக்கப்பட்டிருந்தது. இதுவரை அவருடன் தொடர்புடைய சுமார் ரூ.473.17 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!