பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த ராணுவ வீரர்!!  தட்டி தூக்கிய காவல்துறை!! 

 


நீலகிரி மாவட்டம் குன்னூரில் பணிபுரியும் பெண் காவலர்   பணி நிமித்தமாக கோவை சென்று விட்டு குன்னூர் திரும்பிய வழியில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறினார். அதே பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கோத்தகிரி அஜூர் பகுதியில் வசித்து வரும்  ராஜ் என்பவரது மகன் தர்மனும் பயணம் செய்தார். இவருக்கு வயது  56.  இவர்  முன்னாள் ராணுவ வீரராக பணிபுரிந்தவர். பின் இருக்கையில் இருந்து கொண்டே பெண் காவலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். 


முதலில் தட்டிக் கழித்த பெண் காவலர் சில்மிஷம் தொடரவே ராணுவ வீரர் தர்மனை தாக்கத் தொடங்கினார். அதற்கு தர்மன் அந்த பெண் காவலரை திருப்பித் தாக்கியுள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் தர்மனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எனக்கு பெரிய அதிகாரிகளை தெரியும். உடனடியாக மற்ற பேருந்து பயணிகள் நிஜம் என நம்பி எனக்கென்ன என விட்டுவிட்டனர். அதே போல்  பேருந்து நடத்துனர் மற்றும் தர்மன் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவரும்  தர்மனை காப்பாற்றுவதாக கருதி பேருந்திலிருந்து இறக்கி விட்டுள்ளார். அவரை தொடர்ந்து பெண் காவலரும் அதே நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். 


தர்மன் தப்பியோடுவதற்காக இனியொரு பேருந்தில் ஏறிய போது பெண் காவலரும் அதே பேருந்தில் ஏறி குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் பேருந்தை நிறுத்தி சக காவலர் உதவியுடன் தர்மனை இறக்கி குன்னூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார் . விசாரணையில் தர்மன் பெண் காவலரிடம் அத்து மீறியது உறுதியானது. அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் பேரில் தர்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!